இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஒரு வாரமாக குறையாத பக்தர்கள் கூட்டம்

Published On 2025-06-09 10:49 IST   |   Update On 2025-06-09 10:49:00 IST
  • திருப்பதி கோவிலில் இருந்து என்.ஜி.செட் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர்.
  • நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஒரு வாரமாக தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கூட்டம் குறையவில்லை. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கட்டுக்கடங்காத அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வந்திருந்தனர்.

வைகுண்டம் பக்தர்கள் காத்திருப்பு அறைகள், நாராயணகிரி தோட்டம், 4 மாட வீதிகள் என அனைத்து இடங்களிலும் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர்.

இதனால் திருப்பதி கோவிலில் இருந்து என்.ஜி.செட் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர்.

திருப்பதியில் நேற்று 90, 802 பேர் தரிசனம் செய்தனர். 35,776 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 3.73 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News