இந்தியா

பணம் தரலன்னா குண்டு வீசுவேன் - வங்கியில் புகுந்த நபரால் பரபரப்பு

Published On 2023-05-20 12:15 GMT   |   Update On 2023-05-20 12:15 GMT
  • தெலுங்கானாவில் வங்கிக்குள் புகுந்து மர்ம நபர் ஒருவர் பணம் கேட்டு மிரட்டினார்.
  • தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் மேட்ச்சல் மாவட்டம் ஜி.டி.மெட்லா நகரில் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு புகுந்த நபர் ஒருவர், போலி வெடிகுண்டை காண்பித்து அங்குள்ளவர்களை மிரட்டினார். அவர், தனக்கு உடனடியாக 2 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். தவறினால் வெடிகுண்டை வெடிக்க செய்துவிடுவேன் என்றார்.

இதையடுத்து, வங்கியில் இருந்த வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் அந்த நபரை மடக்கி பிடித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.

விசாரணையில், ஜி.டி.மெட்லா பகுதியைச் சேர்ந்த கிரேன் ஆபரேட்டர் சிவாஜி என தெரிய வந்தது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News