இந்தியா
மேற்கு வங்கத்திற்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தலா ரூ. 5000: மம்தா பானர்ஜி
- நாங்கள் நேபாளத்தின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.
- விரைவில் உங்கள் அனைவரையும் அழைத்து வருவோம் என தெரிவித்தார் மம்தா.
கொல்கத்தா:
மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாங்கள் எங்கள் தாய்மொழியான வங்காள மொழியைப் பேசுவோம் என்பதில் தெளிவாக இருக்க விரும்புகிறோம். நாங்கள் மற்ற மொழிகளையும் மதிக்கிறோம்.
வங்காளத்திற்குத் திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ. 5000 வழங்கப்படும். அவர்கள் தங்கள் குழந்தைகளை அருகிலுள்ள பள்ளியில் சேர்க்க முடியும்.
நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பான பிரச்சனையை தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன்.
நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை சிறிது நேரம் காத்திருக்கச் சொல்ல விரும்புகிறேன். நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், விரைவில் உங்கள் அனைவரையும் அழைத்து வருவோம் என தெரிவித்தார்.