இந்தியா

மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா - ஒரே நாளில் 1,152 பேருக்கு பாதிப்பு

Published On 2023-04-14 19:41 IST   |   Update On 2023-04-14 19:41:00 IST
  • இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் தற்போது அதிகரித்துள்ளது.
  • மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 1,152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

மும்பை:

இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பல்வேறு மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் உயர்ந்து வருகிறது. அங்கு இன்று ஒரே நாளில் 1,152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 4 பேர் தொற்றால் உயிரிழந்தனர். 5,928 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

7 மாத காலத்துக்குப் பிறகு மகாரஷ்டிராவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டி பதிவாகி வருகிறது.

Tags:    

Similar News