இந்தியா

பிரபல பாடகர் உஸ்தாத் ரஷீத் கான் மறைவு - மம்தா பானர்ஜி இரங்கல்

Published On 2024-01-09 14:47 GMT   |   Update On 2024-01-09 14:58 GMT
  • புகழ்பெற்ற ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் பாடகர் உஸ்தாத் ரஷீத் கான் புற்று நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார்.
  • அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார்

ராம்பூர் சஹாஸ்வான் கரானா இசை குடும்பத்தை சேர்ந்தவர் பிரபல கிளாசிக்கல் பாடகர் உஸ்தாத் ரஷித் கான்(55). புரோஸ்டேட் வகை புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார்.

உஸ்தாத்தின் மரணத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "உஸ்தானின் மரணம் குறித்து அறிந்து மிகவும் வேதனையுற்றேன். அவரது இழப்பு நாட்டுக்கும் ஒட்டுமொத்த இசை உலகுக்கும் மிகப் பெரிய இழப்பாகும். நான் மிகுந்த வலியுடன் இருக்கிறேன். உஸ்தான் ரஷித் கான் இனி இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை" என்று தெரிவித்தார். மேலும் , அவரது உடல் நாளை(ஜன.10) ரபிந்தர சதானுக்கு கொண்டு செல்லப்படும். அங்கு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தலாம் என்றும், அவரது இறுதி சடங்கில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News