இந்தியா

இன்று காலை முதல் லால்பாக் ராஜா கணபதி தரிசனத்திற்கு அனுமதி இல்லை

Published On 2022-09-08 02:50 GMT   |   Update On 2022-09-08 02:50 GMT
  • லால்ராஜா கணபதியை தரிசனம் செய்ய தினசரி ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர்.
  • நாளை(வெள்ளிக்கிழமை) ஆனந்த சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தியை யொட்டி மும்பையில் மிகவும் பிரசித்தி பெற்ற லால்ராஜா கணபதியை தரிசனம் செய்ய தினசரி ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களை கட்டுப்படுத்த 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நேர்த்தி கடனாக தங்கம், வெள்ளி உள்ளிட்ட காணிக்கையை செலுத்தி வருகின்றனர். நேற்று ஒரே நாளில் அங்கு காணிக்கையாக ரூ.3 கோடி அளவில் தங்கம், வெள்ளி, பணம் போன்றவை பெறப்பட்டது.

இந்தநிலையில் நாளை(வெள்ளிக்கிழமை) நடைபெறும் ஆனந்த சதுர்த்தியையொட்டி லால்பாக் ராஜா கணபதி சிலை கரைப்பிற்காக ஏற்பாடுகள் செய்ய இருப்பதால் இன்று(வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்படுவதாக மண்டல் நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags: