இந்தியா

பள்ளிகளுக்கு மேலும் 10 நாள் விடுமுறை: எங்கு தெரியுமா?

Published On 2025-10-07 17:50 IST   |   Update On 2025-10-07 17:50:00 IST
  • கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கியது.
  • ஆசிரியர்கள் சங்கம் விடுமுறையை நீட்டிக்க கோரிக்கை விடுத்திருந்தது.

பெங்களூரு:

கர்நாடக அரசின் சமூக நீதி ஆணையம் தலைமையில் நடைபெறும் சாதிவாரி கணக்கெடுப்பு கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கப்பட்டது.

பல மாவட்டங்களில் இந்தக் கணக்கெடுப்பு முழுமையாக நிறைவேறவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், முதல் மந்திரி சித்தராமையா தலைமையில் அவசர கூட்டம் இன்று நடைபெற்றது. அதன்பின் முதல் மந்திரி சித்தராமையா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

மாநிலத்தின் அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கும் அக்டோபர் 18-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் சங்கம் விடுமுறையை நீட்டிக்க கோரியிருந்தது. அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் தொடர்ந்து பணி புரிந்து முழுமையான கணக்கெடுப்பு தரவுகளைப் பதிவு செய்யும் வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த கணக்கெடுப்பில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் பங்கேற்று பணியாற்றி வருகின்றனர்.

மாணவர்களுக்கு தசரா விடுமுறை காலத்துடன் இணைந்த சாதி கணக்கெடுப்பு விடுமுறை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News