இந்தியா

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடக அரசு தண்ணீர் திறப்பு

Published On 2023-08-31 05:31 GMT   |   Update On 2023-08-31 05:31 GMT
  • காவிரி மேலாண்மை ஆணையம் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட உத்தரவு
  • காவிரியில் நேற்றை அளவைவிட இன்று அதிக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது

காவிரி மேலாண்மை வாரியம் செப்டம்பர் 12-ந்தேதி வரை தமிழகத்திற்கு வினாடிக்கு 5,000 கனஅடி நீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவு தங்களுக்கு சாதகமாக இல்லை என்று கருதிய போதிலும், உத்தரவை பின்பற்றும் வகையில் நேற்றில் இருந்து தண்ணீர் திறக்கும் பணியை தொடங்கியுள்ளது. இதை காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக கே.ஆர்.எஸ். அணை, கபினி அணையில் இருந்து நேற்று 6398 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று 9279 கனஅடியாக அதிகரித்துள்ளது.

முதலில் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட கேட்டுக்கொள்ளப்பட்டது. அப்போது போதிய மழையின்மை காரணத்தினால் அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால், அவ்வளது நீர் திறந்து விடமுடியாது என்று கர்நாடகா தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் கர்நாடகா என இரண்டு அரசுகளும் இது தொடர்பாக உச்சநீதிமன்றம் செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளன. கர்நாடக மாநில துணை முதல்வர் சிவக்குமார் நாளை டெல்லி செல்ல இருக்கிறார்.

Tags:    

Similar News