இந்தியா

கர்நாடக சட்டசபை தேர்தலில் 87,501 பேர் வீட்டில் இருந்தபடியே வாக்களிப்பு

Published On 2023-05-05 12:14 IST   |   Update On 2023-05-05 15:18:00 IST
  • கர்நாடக சட்டசபை தேர்தலில் முதல் முறையாக 80 வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
  • கர்நாடகத்தில் நேற்று வரை 87 ஆயிரத்து 501 பேர் வீட்டில் இருந்தவாறு வாக்களித்து ஜனநாயக கடமையாற்றி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலில் முதல் முறையாக 80 வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க மாநிலம் முழுவதும் 99 ஆயிரத்து 529 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி, கடந்த ஏப்ரல் 29-ந் தேதியில் தொடங்கி நாளை வரை வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கபப்ட்டிருந்தது.

இதுவரை கர்நாடகத்தில் நேற்று வரை 87 ஆயிரத்து 501 பேர் வீட்டில் இருந்தவாறு வாக்களித்து ஜனநாயக கடமையாற்றி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்களிக்க விண்ணப்பித்த முதியவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். பெங்களூருவில் மட்டும் நேற்று முன்தினம் வரை 54 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். வீட்டில் இருந்தபடியே வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க நாளை (சனிக்கிழமை) கடைசி நாளாகும்.

Tags:    

Similar News