இந்தியா

பேராசிரியருக்கு ஓவியத்தை பரிசளித்த மாணவர்

Published On 2024-03-02 10:26 GMT   |   Update On 2024-03-02 10:26 GMT
  • மாணவர் ஒருவர் தனது பேராசிரியருக்கு அவரின் உருவப்படத்தை ஓவியமாக வரைந்து வழங்கிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
  • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் மாணவரின் கலைத்திறமையை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மாணவர்கள் தங்களுக்கு பிடித்த ஆசிரியர்களுக்கு வித்தியாசமான பரிசுகளை வழங்க ஆசைப்படுவார்கள். அந்த வகையில் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவர் தனது பேராசிரியருக்கு அவரின் உருவப்படத்தை ஓவியமாக வரைந்து வழங்கிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், பேராசிரியரிடம் மாணவர்கள் சிலர் அவரது உருவப்படத்தை ஓவியமாக வரைந்து பரிசளிப்பதையும், அதைப்பார்த்த பேராசிரியர், இது அச்சிடப்பட்டதா? என வியப்புடன் கேட்பதையும், பின்னர் அந்த ஓவியத்தை வரைந்த மாணவரை பாராட்டும் காட்சிகளும் பயனர்களை கவர்ந்துள்ளது.

பகிரப்பட்ட சில மணி நேரங்களில் 50 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்த அந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் மாணவரின் கலைத்திறமையை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.



Tags:    

Similar News