இந்தியா

ஆந்திர வனப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஓநாய்கள் நடமாட்டம் அதிகரிப்பு

Published On 2023-03-07 12:56 IST   |   Update On 2023-03-07 12:56:00 IST
  • கடந்த 10 ஆண்டுகளாக நல்லமலா வனப்பகுதியில் இந்திய ஓநாய்கள் தென்படவில்லை.
  • நல்லமலா வனப்பகுதியில் இந்திய ஓநாய்கள் அதிக அளவில் நடமாட தொடங்கியுள்ளன

திருப்பதி:

ஆந்திரப் பிரதேசத்தின் அனைத்து கிராமப்புற பகுதிகளிலும் குறிப்பாக பிரகாசம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும்-நல்லமலா வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்திய ஓநாய்கள் காணப்பட்டது.

வயல்களில் மின்வேலி அமைத்தல், அதிக அளவில் பூச்சிக்கொல்லி பயன்பாடு, உணவு ஆதாரங்கள் குறைதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நல்லமலாவில் ஓநாய்களின் எண்ணிக்கை குறைந்தது. கடந்த 10 ஆண்டுகளாக நல்லமலா வனப்பகுதியில் இந்திய ஓநாய்கள் தென்படவில்லை.

தற்போது நல்லமலா வனப்பகுதியில் இந்திய ஓநாய்கள் அதிக அளவில் நடமாட தொடங்கியுள்ளன. இதனை வனவிலங்கு உயிரின ஆர்வலர்கள் நேரில் கண்டு கணக்கெடுத்து உள்ளனர்.

நல்லமலா மலைத்தொடரில் உள்ள வன அலுவலர்கள் சமீபத்தில் டோர்னாலா-அத்மகூர் எல்லைப் பகுதியில் அழிந்துவரும் இனமான இந்திய ஓநாய்கள் ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு பிறகு காணப்படுவது வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஓநாய்கள் சாத்தியமான கால்நடைகளை வேட்டையாடக் கூடியவை மற்றும் முக்கியமாக செம்மறி ஆடு மற்றும் முயல்களை உண்ணும், மிருகங்கள் போன்ற பெரிய இரையை குறிவைக்கும்போது, அவை ஜோடியாக வேட்டையாட விரும்புகின்றன.

"ஓநாய்களைப் பாதுகாக்க சில சிறப்பு நடவடிக்கைகளை எடுப்போம். மேலும் நல்லமலா வனப்பகுதியின் சுற்றுச்சூழல், வன விலங்குகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு கேடு விளைவிக்கும் எந்த ஒரு செயலிலும் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News