இந்தியா

பிரித்வி-II, அக்னி-I பாலிஸ்டிக் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா..!

Published On 2025-07-17 21:49 IST   |   Update On 2025-07-17 21:49:00 IST
  • லடாக்கில் ஆகாஷ் பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது.
  • குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளான பிரித்வி-II, அக்னி-I சோதனை வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா இன்று மூன்று ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது. இந்த மூன்றும் வெற்றிகரமாக இலக்கை தாக்கி தாக்கி அழித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லடாக்கில் சுமார் 4,500 மீ தூரம் சென்று இலக்கை தாக்கி அழிக்கும் புதிய ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. ஆகாஷ் பிரைம் ஏவுகணை ஆகாஷ் மார்க்-I மற்றும் ஆகாஷ்-Is ஆகியவற்றின் புதிய வடிவம் ஆகும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.

இந்த நிலையில் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளான பிரித்வி-II, அக்னி-I சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News