இந்தியா
null
பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை நிறுத்தியது இந்தியா
- பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- பிரதமர் மோடி உடனடியாக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தை கூட்டினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதைதொடர்ந்து பிரதமர் மோடி உடனடியாக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்திருந்தது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை தற்போது இந்தியா நிறுத்தியது.