இந்தியா

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்- டெல்லியில் 4 பேர் கைது

Published On 2023-07-04 13:59 IST   |   Update On 2023-07-04 14:46:00 IST
  • நீட் தேர்வில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு பதிலாக முதலாம் ஆண்டு மாணவர்களை தேர்வு எழுத வைத்தது தற்போது அம்பலமாகி உள்ளது.
  • குற்றவாளிகளிடம் இருந்து லேப்டாப் மற்றும் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுடெல்லி:

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 4 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

டெல்லி எய்ம்ஸில் 2ம் ஆண்டு படிக்கும், நரேஷ் பிஷ்ரோய் என்பவர் இந்த கும்பலுக்கு தலைமை தாங்கியதாக புகார் எழுந்துள்ளது.

நீட் தேர்வில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு பதிலாக முதலாம் ஆண்டு மாணவர்களை தேர்வு எழுத வைத்தது தற்போது அம்பலமாகி உள்ளது. தங்களை அணுகும் மாணவர்களிடம் தலா ரூ.7 லட்சம் வசூல் செய்து ஆள்மாறாட்டம் செய்துள்ளனர்.

குற்றவாளிகளிடம் இருந்து லேப்டாப் மற்றும் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News