இந்தியா
null

உலகக் கோப்பை ஃபைனலில் விமான சாகச நிகழ்ச்சி.. வைரலாகும் மாஸ் வீடியோ

Published On 2023-11-18 08:29 GMT   |   Update On 2023-11-18 08:48 GMT
  • இந்திய விமானப்படையின் சூர்யகிரண் ஏரோபடிக் குழு விமான சாகசத்தில் ஈடபடவுள்ளது.
  • இந்திய விமானப்படையின் சாகச ஒத்திகை வீடியோக்கள் வைரல்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நாளை (நவம்பர் 19) மதியம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

இறுதிப் போட்டியை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்திய விமானப்படையின் சூர்யகிரண் ஏரோபடிக் குழு நாளை மதியம் 1.30 மணியளவில் விமான சாகசத்தில் ஈடபடவுள்ளது.

இதற்கான ஒத்திகை நேற்று துவங்கிய நிலையில், இன்றும் விமானப்படை வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர். இந்திய விமானப்படையின் சாகச ஒத்திகை தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 

Tags:    

Similar News