இந்தியா

தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்- நிதின் கட்காரி

Published On 2024-04-19 05:37 GMT   |   Update On 2024-04-19 05:42 GMT
  • நாக்பூரில் பாஜக வேட்பாளருமான நிதின் கட்கரி தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
  • 75 சதவீத வாக்குப்பதிவைக் கொண்டு செல்வதே எங்களது லட்சியம்.

நாடு முழுவதும் இன்று 21 மாநிலங்களில் உள்பட்ட 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று வாக்களித்த மத்திய அமைச்சரும் பாஜக வேட்பாளருமான நிதின் கட்கரி தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

பின்னர் நிதின் கட்காரி பேசியதாவது:-

நாட்டின் மிகப்பெரிய பண்டிகையை நாங்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறோம்.

நாக்பூரில், வெப்பநிலை அதிகமாக இருப்பதால், சீக்கிரம் வந்து வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களுக்கு நான் குறிப்பாக வேண்டுகோள் விடுக்கிறேன்.

கடந்த முறை 54 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இம்முறை 75 சதவீத வாக்குப்பதிவைக் கொண்டு செல்வதே எங்களது லட்சியம்.

இந்த தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News