இந்தியா

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார் ஹேமந்த் சோரன்

Published On 2024-01-31 15:47 GMT   |   Update On 2024-01-31 17:46 GMT
  • அமலாக்கத்துறை காவலில் இருப்பதாக தகவல்.
  • அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் ராஜினாமா கடிதம் கொடுக்க ஆளுநர் மாளிகை சென்றதாக தகவல்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டிற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பலமணி நேரம் விசாரணை மேற்கொண்ட நிலையில், இன்று இரவு ஹேமந்த் சோரன் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார். இதனால் புதிய முதல்வராக சம்பாய் தேர்வாக உள்ளார்.

இந்த நிலையில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்.பி. மஹுவா மஜி "ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையின் காவலில் (Custody) உள்ளார். அமலாக்கத்துறை அதிகாரிகளுடன்தான் ஹேமந்த் சோர்ன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய சென்றார். சாம்பாய் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட இருக்கிறார். எங்களுக்கு போதுமான எண்ணிக்கை உறுப்பினர்கள் உள்ளனர்" என்றார்.

அமலாக்கத்துறை காவலில் உள்ள ஹேமந்த் சோரன் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News