இந்தியா

முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த பல் மருத்துவர் - 2 பேர் உயிரிழப்பு

Published On 2025-05-17 11:08 IST   |   Update On 2025-05-27 08:52:00 IST
  • அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் அனுஷ்கா தலைமறைவானார்.
  • மருத்துவர் அனுஷ்காவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பலர் முகம் வீங்கி, உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் அனுஷ்கா தலைமறைவானார். பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், மருத்துவர் அனுஷ்காவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

முடி மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவர் அனுஷ்கா ஒவ்வொருவரிடம் ரூ.40,000 முதல் ரூ. 1 லட்சம் வரை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News