இந்தியா

IIDEA: ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவன தலைவராக பொறுப்பேற்கும் ஞானேஷ் குமார்!

Published On 2025-11-27 15:06 IST   |   Update On 2025-11-27 15:07:00 IST
  • ஜனநாயகத்தை வலுப்படுத்த 1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது IIDEA
  • இது இந்தியா உட்பட 35 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஒரு மன்றமாகும்.

இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவி நிறுவனம் (IIDEA) 2026 இன் தலைவராக பொறுப்பேற்க உள்ளார் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜனநாயகத்தை வலுப்படுத்த 1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட IIDEA, இந்தியா உட்பட 35 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஒரு மன்றமாகும்.

அமெரிக்காவும் ஜப்பானும் பார்வையாளர் நாடுகளாக இந்த அமைப்பில் பங்கேற்கின்றன. தற்போது தலைமைப் பொறுப்பை வகிக்கும் சுவிட்சர்லாந்து, 2026க்கான பொறுப்பை இந்தியாவிடம் ஒப்படைக்க உள்ளது.

டிசம்பர் 3 ஆம் தேதி அமெரிக்காவின் ஸ்டாக்ஹோமில் நடைபெறும் உறுப்பு நாடுகளின் கூட்டத்தில் ஞானேஷ் குமார் இந்த பொறுப்பை ஏற்கிறார்.

இதன் தலைவராக, ஞானேஷ் குமார் 2026 வரை அனைத்து கவுன்சில் கூட்டங்களுக்கும் தலைமை தாங்குவார். 

Tags:    

Similar News