இந்தியா

அவுரங்கசீப்பின் பயங்கரவாதத்திற்கு எதிராக மலைபோல் நின்ற குரு கோபிந்த் சிங் - பிரதமர் மோடி

Published On 2022-12-26 19:50 IST   |   Update On 2022-12-26 19:50:00 IST
  • சீக்கிய மத குருக்களில் 10வது மற்றும் மிகவும் முக்கியமானவர் குரு கோபிந்த் சிங்.
  • அவுரங்கசீப்பும் அவரது மக்களும் வாள் மூலம் குரு கோபிந்த் சிங்கின் குழந்தைகளை மத மாற்றம் செய்ய முயற்சித்தனர்.

புதுடெல்லி:

சீக்கிய மத குருக்களில் 10வது மற்றும் மிகவும் முக்கியமானவர் குரு கோபிந்த் சிங். இவரின் நினைவாக 'வீர் பல் திவாஸ்' தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

அவுரங்கசீப்பும் அவரது மக்களும் வாள் மூலம் குரு கோபிந்த் சிங்கின் குழந்தைகளை மத மாற்றம் செய்ய முயற்சித்தனர். ஆகையால் தான் அவுரங்கசீப் குரு கோபிந்த் சிங்கின் 2 குழந்தைகளையும் கொலை செய்ய முடிவு செய்தார்.

அவுரங்க சீப்பின் பயங்கரவாதத்திற்கு எதிராகவும், இந்தியாவை மாற்ற வேண்டும் என்ற அவரின் திட்டத்திற்கு எதிராகவும் குரு கோபிந்த் சிங் மலை போல் நின்ற அந்த காலத்தை நினைத்து பாருங்கள் என்றார்.

Tags:    

Similar News