இந்தியா

65 வயது பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த பேரன் கைது

Published On 2025-07-09 23:13 IST   |   Update On 2025-07-09 23:13:00 IST
  • கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக மூதாட்டி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
  • BNS சட்டத்தின் 64(2) (பாலியல் வன்கொடுமை) பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இமாச்சலப் பிரதேசத்தில் தனது 65 வயது பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 25 வயது பேரன் கைது செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கணவர் இறந்த பிறகு தனியாக வசித்து வந்த மூதாட்டி அளித்த புகாரின் பேரில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

ஜூலை 3 ஆம் தேதி மதியம் தனது பேரன் வீட்டிற்கு வந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்து, இந்த சம்பவம் குறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக மூதாட்டி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

BNS சட்டத்தின் 64(2) (பாலியல் வன்கொடுமை), 332(B) (அத்துமீறி நுழைதல்) மற்றும் 351(3) (மிரட்டல்) பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News