இந்தியா

விசாகப்பட்டினத்தில் எஃகு ஆலையில் தீ விபத்து

Published On 2025-05-23 12:41 IST   |   Update On 2025-05-23 12:54:00 IST
  • ஆலையில் எஃகு உருக்கும் அமைப்பு-2ல் உள்ள எந்திரத்தில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
  • எந்திரத்தில் எண்ணெய் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

விசாகப்பட்டினம்:

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் எஃகு ஆலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்த ஆலையில் எஃகு உருக்கும் அமைப்பு-2ல் உள்ள எந்திரத்தில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. பின்னர் தீ மளமளவென்று மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அங்கு புகை மூட்டம் ஏற்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயை கட்டுக்குள் கொண்டு வர கடுமையாக போராடினார்கள்.

ஒரு எந்திரத்தில் எண்ணெய் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், பின்னர் தீ அருகில் இருந்த கேபிள்கள், எந்திரங்களுக்கு பரவியதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News