இந்தியா (National)

ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு

Published On 2023-02-24 09:25 GMT   |   Update On 2023-02-24 09:25 GMT
  • நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டது.
  • நடைபெறும் முறைகேடுகள், ஆளும் கட்சியின் அராஜகங்கள் பற்றி எந்த புகார் கொடுத்தாலும் ஏற்க அதிகாரிகள் தயாராக இல்லை.

புதுடெல்லி:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டது.

அந்த கட்சியின் சட்டப்பிரிவு நிர்வாகி ஜெகதீஸ்வரன் நேரில் சென்று புகார் அளித்தார். அந்த புகாரில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு சேகரிக்க முடியாத நிலை உள்ளது. அங்கு நடைபெறும் முறைகேடுகள், ஆளும் கட்சியின் அராஜகங்கள் பற்றி எந்த புகார் கொடுத்தாலும் ஏற்க அதிகாரிகள் தயாராக இல்லை. இது தொடர்பாக ஏற்கனவே மாநில தேர்தல் அலுவலகத்தில் புகார் தெரிவித்து இருக்கிறோம். இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காததால் தங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறோம்.

இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News