இந்தியா

விரைவில் 100 கோடிக்கு அதிகமான வாக்காளர்கள்- தலைமை தேர்தல் ஆணையர்

Published On 2025-01-07 14:32 IST   |   Update On 2025-01-07 15:06:00 IST
  • நான் அறிவிக்கும் கடைசி தேர்தல் தேதி இதுவாகும்.
  • தேர்தல் நடத்தப்படுவதில் 70 நடைமுறைகள் உள்ளன.

டெல்லி சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு குறித்து செய்தியாளர்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சந்தித்து வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:-

* இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை 100 கோடிக்கு மேல் என்பதை விரைவில் எட்டுவோம்.

* வாக்களிப்பதிலும், பெண்களின் பங்கேற்பிலும் புதிய சாதனைகளை படைத்துள்ளோம்.

* நாம் 99 கோடி வாக்காளர்கள் எண்ணிக்கையை கடந்த கொண்டிருக்கிறோம்.

* பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை சுமார் 48 கோடியை எட்டியுள்ளது.

* நான் அறிவிக்கும் கடைசி தேர்தல் தேதி இதுவாகும்.

* டெல்லியில் 83.5 ஆண் வாக்காளர்கள் உள்ளனர். 71.7 பெண் வாக்காளரக்ள் உள்ளனர். மற்றவர்கள் 1261 பேர்.

* குறிப்பிட்ட குழுக்களை குறிவைத்து வாக்காளர் பட்டியலில் தவறான சேர்த்தல்கள் அல்லது நீக்கங்கள் குறித்து வதந்திகள் பரப்பப்படுகின்றன.

* வாக்காளர் பட்டியல் முற்றிலும் வெளிப்படையானது.

* ஜனநாயகத்தில் உள்ளார்ந்த கேள்வி கேட்கும் உரிமை உள்ளது. அனைத்து சந்தேகங்களையும் நீக்குவது தேர்தல் ஆணையத்தின் கடமை.

* தேர்தல் நடத்தப்படுவதில் 70 நடைமுறைகள் உள்ளன.

* 2020 பீகார் மாநிலத் தேர்தலுக்குப் பிறகு 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த தேர்தல்களில் 15 வெவ்வேறு கட்சிகள் தனிப்பெரும் கட்சிகளாக உருவெடுத்துள்ளன.

* படிவம் 7 இல்லாமல் வாக்காளர் பெயர் நீக்கம் செய்யப்படாது என்றார். 

Tags:    

Similar News