இந்தியா

மருத்துவ மாணவர் சேர்க்கை இடஒதுக்கீடு ஊழல் - கல்லூரிகளில் அமலாக்கத்துறை சோதனை

Published On 2024-12-03 10:20 IST   |   Update On 2024-12-03 11:15:00 IST
  • மேற்கு வங்கத்தின் ஹல்தியா, பர்பா மேதினிபூரில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தியது.
  • பணம் கொடுத்து போலி சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டு, மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை நடந்ததாக கூறப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தியது.

மேற்கு வங்கத்தின் ஹல்தியா, பர்பா மேதினிபூரில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தியது. துர்காபூர் மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு தனியார் மருத்துவ கல்லூரிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில், பணம் கொடுத்து போலி சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டு, மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை நடந்ததாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News