இந்தியா

மணிப்பூரில் 3.2 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்

Published On 2023-02-28 04:23 IST   |   Update On 2023-02-28 04:23:00 IST
  • அதிர்ச்சி அடைந்த மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.
  • நிலநடுக்கம் 25 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்தது.

இம்பால்:

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள நோனி நகரில் இன்று அதிகாலை 2.46 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் 25 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்து வீட்டைவிட்டு வெளியேறிய மக்கள் தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்ட விவரங்கள் வெளிவரவில்லை.

Tags:    

Similar News