இந்தியா

நடப்பு ஆண்டின் முதல் பாதியில் உள்ளூர் விமான போக்குவரத்து அதிகரிப்பு

Published On 2024-07-16 19:45 IST   |   Update On 2024-07-16 19:45:00 IST
  • உள்நாட்டு விமான போக்குவரத்து பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
  • இது விமானப் போக்குவரத்துத் துறையின் நேர்மறையான பாதையை எடுத்துக்காட்டுகிறது.

புதுடெல்லி:

விமான போக்குவரத்து ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் உள்நாட்டு விமானங்களில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் வருமாறு:

2024-ம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவில் உள்நாட்டு விமான நிறுவனங்கள் 7.93 கோடி பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 7.61 கோடி பயணிகளுடன் ஒப்பிடும்போது 4.28 சதவீதம் ஆண்டு வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. மாதாந்திர அடிப்படையில் பயணிகள் வளர்ச்சி 5.76 சதவீதம் ஆக இருந்தது.

2023-ம் ஆண்டில் உள்நாட்டு விமான நிறுவனங்கள் 15.2 கோடி பயணிகளை ஏற்றிச்சென்றன. இது 2022-ம் ஆண்டில் 12.32 கோடியிலிருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும். இது 23.36 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்தைக் குறிக்கும்.

மே 2024-ல் திட்டமிடப்பட்ட உள்நாட்டு விமானங்களின் ஒட்டுமொத்த ரத்து விகிதம் 1.70 சதவீதம். இந்த ரத்துக்கான முதன்மை காரணம் பாதகமான வானிலை. இது மொத்த ரத்துகளில் 39.6 சதவீதம் ஆகும். செயல்பாட்டு காரணங்கள் 23 சதவீதம், இதர காரணங்கள் 19.5 சதவீதம், தொழில்நுட்ப சிக்கல்கள் 16.4 சதவீதம் மற்றும் வணிக காரணங்கள் 1.3 சதவீதம்.

மே 2024-ல் திட்டமிடப்பட்ட உள்நாட்டு விமான நிறுவனங்கள் மொத்தம் 723 பயணிகள் தொடர்பான புகார்களைப் பெற்றுள்ளன, சராசரியாக 10,000 பயணிகளுக்கு 0.52 புகார்கள் வந்துள்ளன.

அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையானது விமானப் பயணத்திற்கான வளர்ந்து வரும் தேவையை சுட்டிக் காட்டியதுடன், விமானப் போக்குவரத்துத் துறையின் நேர்மறையான பாதையை எடுத்துக்காட்டுகிறது என டிஜிசிஏ தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News