இந்தியா

திறன் மேம்பாட்டு வழக்கு- எப்ஐஆர் ரத்து செய்யக்கோரிய சந்திரபாபு நாயுடு மனு தள்ளுபடி

Published On 2023-09-22 14:48 IST   |   Update On 2023-09-22 14:48:00 IST
  • சந்திரபாபு நாயுடுவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
  • ரத்து செய்யக்கோரிய மனு இன்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்-அமைச்சருமான சந்திரபாபு நாயுடு ரூ.371 கோடி திறன்மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

சந்திரபாபு நாயுடுவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், திறன் மேம்பாட்டு வழக்கில் தன் மீது பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரை ரத்து செய்யக் கோரி சந்திரபாபு நாயுடு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

திறன் மேம்பாட்டு வழக்கில் தன் மீது பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து ஆந்திரா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News