இந்தியா

ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்று உங்களுக்கு தெரியுமா?.. மனுதாரர் மீது மும்பை உயர்நீதிமன்றம் சீற்றம்!

Published On 2025-07-15 23:42 IST   |   Update On 2025-07-15 23:42:00 IST
  • தனது மனுவின் நகலை படிக்க ராகுலுக்கு உத்தரவிடுமாறு நீதிமன்றத்தை அவர் கேட்டுக் கொண்டார்.
  • அவர் பிரதமரானால், அவர் பேரழிவை ஏற்படுத்துவார்.

இந்துத்துவா தலைவர் சாவர்க்கரைப் பற்றி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி படித்துப் புரிந்துகொள்ள உத்தரவிட வேண்டும் என்ற மனுவை மும்பை உயர் நீதிமன்றம் விசாரித்தது.

இந்த மனுவை அபினவ் பாரத் காங்கிரஸின் நிறுவனத் தலைவரான பங்கஜ் குமுத்சந்திர பட்னிஸ் தாக்கல் செய்துள்ளார். சாவர்க்கர் குறித்து தான் ஆராய்ச்சி செய்ததாகக் கூறிய இவர், சாவர்க்கர் பற்றி முதிர்ச்சியற்ற மற்றும் பொறுப்பற்ற முறையில் ராகுல் பேசுவதால், தனது மனுவின் நகலை படிக்க ராகுலுக்கு உத்தரவிடுமாறு நீதிமன்றத்தை அவர் கேட்டுக் கொண்டார்.

இதை விசாரித்த நீதிபதிகள் அலோக் ஆராதே மற்றும் சந்தீப் மார்னே ஆகியோர் அடங்கிய அமர்வு, உங்கள் மனுவை எப்படி படிக்கும்படி அவரை கட்டாயப்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மனுதாரர், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் குழப்பத்தை உருவாக்குகிறார் என்றும், அவர் பிரதமரானால், அவர் பேரழிவை ஏற்படுத்துவார்நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

இதனால் கோபமடைந்த நீதிபதிகள், "அவர் பிரதமராவார் என்பது எங்களுக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரியுமா?" என்று அது கேட்டனர். சாவர்க்கரின் பேரன் ஏற்கனவே ராகுலுக்கு எதிராக புனேவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகியுள்ளார், அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்களுக்காக உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த இதுபோன்ற கருத்துகளை பொறுத்துக்கொள்ள முடியாது என்று நீதிமன்றம் கூறியது.

2022 ஆம் ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல் காந்தி சாவர்க்கரை விமர்சித்தார். சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெற்றதாக அவர் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

Similar News