இந்தியா

டார்ஜிலிங் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

Published On 2025-10-06 00:15 IST   |   Update On 2025-10-06 00:15:00 IST
  • மிரிக் என்ற இடத்தில் பாலம் இடிந்து விழுந்தது.
  • இதில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்குள்ள மிரிக் மற்றும் சுகியா பொகாரி ஆகிய இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. மிரிக் என்ற இடத்தில் பாலம் இடிந்து விழுந்தது.

இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் பாலம் இடிந்து விழுந்த சம்பவங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

டார்ஜிலிங்கில் கனமழை சேதங்களில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். கனமழை மற்றும் நிலச்சரிவுவால் பாதிக்கப்பட்டோருக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றார்.

இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல் மந்திரி திங்கட்கிழமை பார்வையிடுகிறார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News