இந்தியா

காற்று மாசு

காற்று மாசு எதிரொலி - டெல்லியில் கட்டுமான பணிகளுக்கு தடை

Published On 2022-12-30 18:59 IST   |   Update On 2022-12-30 18:59:00 IST
  • அதிகரித்து வரும் காற்று மாசால் டெல்லி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
  • டெல்லியில் இயங்கும் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக, குழந்தைகள் சுவாச பிரச்சினைகளில் சிக்குவதால் டெல்லியில் காற்று மாசு சீராகும் வரை தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தேசிய தலைநகரின் நிலைமை, வானிலை துறை மற்றும் காற்றின் தரக் குறியீட்டின் மதிப்பீடு செய்தது. அதன்படி, டெல்லியில் கட்டுமான பணிகள் மற்றும் தொழில்துறை செயல்பாடுகளுக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது.

Tags:    

Similar News