இந்தியா

Deep fake ஒழுங்குமுறை மசோதா - மக்களவையில் அறிமுகம்

Published On 2025-12-06 23:17 IST   |   Update On 2025-12-06 23:17:00 IST
  • ஆபாசமாக சித்தரிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
  • இந்த முன்மொழியப்பட்ட மசோதா முயல்கிறது

ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒருவரை போன்ற போலியான உருவத்தை உருவாக்குவதே deep fake. இவற்றின் மூலம் ஒருவரை ஆபாசமாக சித்தரிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.

குறிப்பாக நடிகைகள், பிரபலங்கள் இதற்கு இரையாகி உள்ளனர். மேலும் பெண்களை தவறாக சித்தரித்து பிளாக் மெயில் செய்யவும் இது பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் சிவசேனா எம்.பி ஸ்ரீகாந்த் ஷிண்டே Deep fake ஒழுங்குமுறை  மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.

இந்தியாவில் deep fake களை உருவாக்குதல், விநியோகித்தல் மற்றும் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்கான தெளிவான சட்ட கட்டமைப்பை நிறுவ இந்த முன்மொழியப்பட்ட மசோதா முயல்கிறது என்று அவர் கூறினார்.

இந்த மசோதா, தேசிய பாதுகாப்பு அபாயங்களை நிவர்த்தி செய்வதற்கும், deep fake தனியுரிமை, பொதுமக்கள் பங்கேற்பு மற்றும் தேர்தல்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்வதற்கும் ஒரு deep fake பணிக்குழுவை நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஷிண்டே கூறினார். 

Tags:    

Similar News