இந்தியா

கொரோனா தினசரி பாதிப்பு 12,751 ஆக குறைந்தது

Published On 2022-08-09 04:47 GMT   |   Update On 2022-08-09 07:36 GMT
  • கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 74 ஆயிரத்து 650 ஆக உயர்ந்தது.
  • கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 16,412 பேர் மீண்டுள்ளனர்.

புதுடெல்லி:

நாட்டில் புதிதாக 12,751 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.

கடந்த 5-ந் தேதி பாதிப்பு 20,551 ஆக இருந்தது. மறுநாள் 19,406, 7-ந் தேதி 18,738, நேற்று 16,167 ஆக இருந்த நிலையில் 4-வது நாளாக இன்றும் சரிந்தது.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 74 ஆயிரத்து 650 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 16,412 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 35 லட்சத்து 16 ஆயிரத்து 71 ஆக உயர்ந்தது.

தற்போது 1,31,807 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 3,703 குறைவு ஆகும்.

தொற்று பாதிப்பால் மேலும் 42 பேர் இறந்துள்ளனர். இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,26,772 ஆக உயர்ந்தது.

Tags:    

Similar News