இந்தியா

தானேயில் கொரோனா வைரஸ் பாதிப்பு.. 21 வயது இளைஞர் சிகிச்சைப் பலனின்றி பலி

Published On 2025-05-25 19:51 IST   |   Update On 2025-05-25 19:51:00 IST
  • சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தானே நகராட்சி தெரிவித்துள்ளது.
  • பெங்களூருவில் நேற்று ஒருவர் கொரோனா வைரஸால் இறந்தார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருமகிறது.

மகாராஷ்டிராவின் தானேயில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் கால்வா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 21 வயது கோவிட்-19 நோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தானே நகராட்சி தெரிவித்துள்ளது.

மும்ப்ராவைச் சேர்ந்த அவர் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மே 22, 2025 அன்று தானேயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையே பெங்களூருவில் நேற்று ஒருவர் கொரோனா வைரஸால் இறந்தார்.   

Tags:    

Similar News