இந்தியா
தானேயில் கொரோனா வைரஸ் பாதிப்பு.. 21 வயது இளைஞர் சிகிச்சைப் பலனின்றி பலி
- சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தானே நகராட்சி தெரிவித்துள்ளது.
- பெங்களூருவில் நேற்று ஒருவர் கொரோனா வைரஸால் இறந்தார்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருமகிறது.
மகாராஷ்டிராவின் தானேயில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் கால்வா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 21 வயது கோவிட்-19 நோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தானே நகராட்சி தெரிவித்துள்ளது.
மும்ப்ராவைச் சேர்ந்த அவர் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மே 22, 2025 அன்று தானேயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையே பெங்களூருவில் நேற்று ஒருவர் கொரோனா வைரஸால் இறந்தார்.