இந்தியா

பீகார் சட்டசபை தேர்தல்: 48 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

Published On 2025-10-17 02:15 IST   |   Update On 2025-10-17 02:15:00 IST
  • பீகார் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் இரு கட்டமாக நடைபெறுகிறது.
  • 6 மற்றும் 11-ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

பாட்னா:

பீகார் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 11-ம் தேதிகளில் இரு கட்டமாக நடைபெற இருக்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகள் இடம் பிடித்துள்ளன.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு தலா 101 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிராக் கட்சிக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 101 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி முதல் கட்டமாக 48 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

மாநில தலைவர் ராஜேஷ் ராம் கடும்பா தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதில் 24 பேர் முதல் கட்ட தேர்தலிலும், மீதி 24 பேர் இரண்டாவது கட்ட தேர்தலிலும் போட்டியிடுகின்றனர்.

Tags:    

Similar News