இந்தியா

ம.பி., தெலுங்கானா, சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் - முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

Published On 2023-10-15 09:45 IST   |   Update On 2023-10-15 09:45:00 IST
  • 5 மாநில தேர்தல் தேதிகளுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது.
  • ஐந்து மாநிலங்களிலும் டிசம்பர் 3-ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.

புதுடெல்லி:

தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை காலம் வரும் டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள் நிறைவடைகிறது. எனவே 5 மாநில தேர்தல் தேதிகளுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது.

மிசோரமில் நவம்பர் 7, சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17, மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17, ராஜஸ்தானில் நவம்பர் 25 மற்றும் தெலுங்கானாவில் நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

ஐந்து மாநிலங்களிலும் டிசம்பர் 3-ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.

இந்நிலையில், மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது.

சத்தீஸ்கரில் 30 பேர் கொண்ட முதல் கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல் மந்திரி பூபேஷ் பாகல் படான் தொகுதியிலும், துணை முதல் மந்திரி சிங் தியோ அம்பிகாபூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

இதேபோல், தெலுங்கானா மாநிலத்தில் 55 பேர் கொண்ட முதல்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. மாநில தலைவர் ரேவந்த் கோடங்கல் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதேபோல், மத்திய பிரதேச மாநிலத்தில் 144 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மாநில தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான கமல்நாத் சிந்த்வாரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

Tags:    

Similar News