இந்தியா

தேர்தல் பிரசாரத்தின்போது பெண்களுடன் நடனமாடிய பிரியங்கா காந்தி

Published On 2024-05-22 13:06 GMT   |   Update On 2024-05-22 13:06 GMT
  • ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் வரும் 25ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
  • ராஞ்சியில் பிரசாரம் மேற்கொள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சென்றார்.

டேராடூன்:

பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. வரும் 25ம் தேதி ஆறாம் கட்ட வாக்குப்பதிவும், ஜூன் ஒன்றாம் தேதி 7-வது கட்ட வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது.

தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள் தங்களின் பிரசாரத்தை தீவிரப்படுத்து வருகின்றன. நட்சத்திர பேச்சாளர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தின் 6வது கட்ட தேர்தலில் ராஞ்சி தொகுதியும் இடம்பிடித்துள்ளது.

இந்நிலையில், ராஞ்சி தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அங்கு சென்றார். அப்போது அவர் ஜார்க்கண்ட் பெண்களுடன் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தார். இதுதொடர்பான புகைப்படங்களை காங்கிரஸ் கட்சி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.

Tags:    

Similar News