இந்தியா

லூதியானா மேற்கு இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

Published On 2025-04-05 00:04 IST   |   Update On 2025-04-05 00:04:00 IST
  • லூதியானா மேற்கு சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
  • இந்தத் தொகுதியில் இன்னும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

சண்டிகர்:

பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு சட்டசபை தொகுதியின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வான குர்பிரீத் பாஷி கோகி, அவர் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கி தற்செயலாக வெடித்ததில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் இன்னும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையே, லூதியானா மேற்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சீவ் அரோரா போட்டியிடுவார் என ஆம் ஆத்மியின் தேசிய பொதுச்செயலாளர் சந்தீப் பதக் அறிவித்தார்.

இந்நிலையில், பஞ்சாப்பின் லூதியானா மேற்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் பாரத் பூஷன் ஆஷு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார்.

Tags:    

Similar News