இந்தியா

அரியானாவில் ஏற்பட்டுள்ள இனக்கலவரம் மனவேதனையை அளிக்கிறது- கேரள முதல்வர் பினராயி விஜயன்

Published On 2023-08-02 08:37 GMT   |   Update On 2023-08-02 08:37 GMT
  • கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
  • வன்முறையை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருவோம்.

அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கலவரத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு வருத்தம் தெரிவித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

அரியானாவில் விரிவடைந்து வரும் துன்பகரமான வகுப்புவாத மோதலால் மனவேதனை அடைகிறேன். உயிர் இழப்புகள் மற்றும் பரவலான ஆணவக் கொலைகள் மறுக்க முடியாத துயரமான ஒன்று. வன்முறையால் 6 பேர் உயிரிழந்தது மற்றும் வடமாநிலத்தில் ஏற்பட்டுள்ள கலவர முன்னேற்றங்கள் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக உள்ளது.

மாநிலத்தில் உள்ள அனைவரும் இன நல்லிணக்கத்தை நிலைநிறுத்துவதில் ஒன்றிணைவோம். வன்முறையை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருவோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News