இந்தியா

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அடுத்தாண்டு இந்தியா வருகிறார் கனடா பிரதமர்

Published On 2025-11-24 14:33 IST   |   Update On 2025-11-24 14:33:00 IST
  • இந்தியாவுடனான உறவில் நாங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறோம்
  • இந்தியாவுடனான வர்த்தக உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

இந்தியாவால் தேடப்படும் பல சீக்கிய பயங்கரவாதிகள் சிலர் கொல்லப்பட்டனர். கனடாவில் நிகழ்ந்த இந்தக் கொலைகளுக்கு இந்தியாதான் காரணம் என கனடா குற்றம் சாட்டியது.

தனது தூதரை வெளியேற்றிய கனடாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், கனடா உயர் தூதரக அதிகாரியை நாட்டை விட்டே வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. கனடா வாழ் மக்களுக்கு விசா வழங்க இந்தியா இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் இருநாடுகள் இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் அமெரிக்க - கனடா உறவில் ஏற்பட்ட விரிசல் குறித்து பேசிய கனடா பிரதமர் மார்க் கார்னி, "இந்தியாவுடனான உறவில் நாங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறோம், இந்தியாவுடனான வர்த்தக உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். இந்திய பிரதமர் மோடியை சந்தித்தது இல்லை. ஆனால் எங்களது வெளியுறவு துறை மந்திரி உள்ளிட்ட பிற மந்திரிகள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளுடன் சிறந்த உறவை வலுப்படுத்துவது மிகவும் அவசியமாகும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று கனடா பிரதமர் மார்க் கார்னி 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா வரவுள்ளதாக கனடா பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த சந்திப்பில் முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Tags:    

Similar News