இந்தியா

என்னை அதிகாரத்தில் இருந்து நீக்க இந்தியா, வெளிநாட்டின் சக்திவாய்ந்த நபர்கள் கைக்கோர்ப்பு: பிரதமர் மோடி

Published On 2024-04-20 15:29 GMT   |   Update On 2024-04-20 15:29 GMT
  • தாய்மார்கள், சகோதரரிகள், மகள்களுக்கு சேவை செய்வதும், அவர்களை பாதுகாப்பதும் மோடியுடைய முன்னுரிமை.
  • எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தற்போது தலைவர் இல்லை. எதிர்காலம் குறித்த திட்டமும் இல்லை.

பிரதமர் மோடி இன்று கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாபுராவில் நடைபெற்ற மிகப் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தாய்மார்கள், சகோதரரிகள் இங்கே மிகப்பெரிய அளவில் திரண்டு வந்துள்ளீர்கள். உங்களுடைய குடும்பத்தை வளர்ப்பதற்கு உங்களுடைய போராட்டம் மற்றும் சவால்களை, மோடியாகிய நான் எனது வீட்டில் பார்த்துள்ளேன்.

இந்த நாட்களில், மோடியை அகற்றுவதற்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பெரிய மற்றும் சக்திவாய்ந்த நபர்கள் ஒன்றுபட்டுள்ளனர்.

ஆனால் நரிசக்தி, மாற்ரு சக்தி ஆகியவற்றின் ஆசீர்வாதத்தால், பாதுகாப்பு கவசத்தால் (Suraksha kavach), மோடி அவற்றை எதிர்கொள்ளும் திரணை பெற்றுள்ளார்.

தாய்மார்கள், சகோதரரிகள், மகள்களுக்கு சேவை செய்வதும், அவர்களை பாதுகாப்பதும் மோடியுடைய முன்னுரிமை. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தற்போது தலைவர் இல்லை. எதிர்காலம் குறித்த திட்டமும் இல்லை. அவர்களுடைய வரலாறு மோசடி.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News