இந்தியா

மும்பை போலீசார்

மாடல் அழகிகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக புகார்- போஜ்புரி நடிகை கைது

Published On 2023-04-22 06:28 GMT   |   Update On 2023-04-22 06:28 GMT
  • இளம்பெண்களை பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியதாக புகார் கூறப்பட்டுள்ளது.
  • நடிகையின் கட்டுப்பாட்டில் இருந்த மூன்று மாடல் அழகிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

மும்பை:

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் போஜ்புரி நடிகை சுமன் குமாரியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மாடல் அழகிகளை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி மும்பை குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது:-

போஜ்புரி நடிகை சுமன் குமாரி (வயது 24), மாடலிங் தொழில் செய்யும் இளம்பெண்களை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக புகார் கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவர் கைது செய்யபப்பட்டுள்ளார். அவர் வசம் இருந்த மூன்று மாடல் அழகிகள் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

இவ்வாறு காவல்துறை கூறி உள்ளது.

Tags:    

Similar News