இந்தியா

ஆந்திராவில் 24 மணி நேரத்தில் 28.95 கி.மீ. தூரத்திற்கு சாலை அமைத்து சாதனை

Published On 2026-01-07 19:33 IST   |   Update On 2026-01-07 19:33:00 IST
  • தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தரநிலைகளுக்கு முழுமையாக இணங்கி செயல்படுத்தப்பட்டது.
  • வருகிற 11-ந்தேதிக்குள் மேலும் 2 கின்னஸ் உலக சாதனைகள் படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் பெங்களூரு-கடப்பா-விஜயவாடா நெடுஞ்சாலை வழித்தடத்தில் 24 மணி நேரத்தில் 28.95 கி.மீ தூரத்திற்கு சாலை அமைத்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆந்திர முதலமைச்ர் சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

ஆந்திராவில் உள்ள பெங்களூரு-கடப்பா-விஜயவாடா பொருளாதார வழித்தடத்தில் (என்.எச்.544ஜி) 24 மணி நேரத்திற்குள் தொடர்ச்சியாக 28.95 கிலோமீட்டர் தூரத்திற்கு 10,675 மெட்ரிக் டன் கான்கிரீட் சாலை அமைத்து 2 கின்னஸ் உலக சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது.

இந்த அசாதாரண சாதனை, இந்திய அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வை, மத்திய மந்திரி நிதின் கட்கரியின் கீழ் உலகத் தரம் வாய்ந்த நெடுஞ்சாலை உள்கட்டமைப்புக்கு அளிக்கப்படும் தொடர்ச்சியான உந்துதல், மற்றும் பொறியாளர்கள், தொழிலாளர்கள்,களக் குழுக்களின் சிறப்பான அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது.

இது கடுமையான தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தரநிலைகளுக்கு முழுமையாக இணங்கி செயல்படுத்தப்பட்டது.

ஆந்திராவில் உள்ள இந்த முக்கிய வழித்தடத்தின் தொகுப்புகள் 2 மற்றும் 3-ல், வருகிற 11-ந்தேதிக்குள் மேலும் 2 கின்னஸ் உலக சாதனைகள் படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு எங்களின் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். இந்தியா கட்டமைக்கிறது. ஆந்திரப் பிரதேசம் சாதிக்கிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News