இந்தியா
அந்தமானில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
- நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 20 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- இன்று அதிகாலை 5.56 மணியளவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
புதுடெல்லி:
அந்தமானில் இன்று காலை 5.56 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.
நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 20 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.