இந்தியா
இமாச்சலில் 3.4 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்
- இமாச்சல பிரதேச மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கம் 3.4 ரிக்டர் அளவுகோலில் பதிவானது.
சிம்லா:
இமாச்சல பிரதேச மாநிலத்தின் லஹோல் மற்றும் ஸ்பிடி மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வை அந்த மாவட்ட மக்கள் உணர்ந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.