இந்தியா

டெல்லியில் ஆம் ஆத்மி கவுன்சிலர் பா.ஜனதாவில் இணைந்தார்

Published On 2023-02-24 08:45 GMT   |   Update On 2023-02-24 08:45 GMT
  • டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சியில் ஊழல் நிறைந்துள்ளது.
  • ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்களிடையே கருத்து வேறுபாடும் உள்ளது என்றார்.

டெல்லி மாநகராட்சி கவுன்சிலரான ஆத் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பவான் செராவத் பா.ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

டெல்லி மாநகராட்சி 6 நிலைக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெறும் நிலையில் அதற்கு முன்னதாக கவுன்சிலர் பவான் செராவத் பா.ஜனதாவில் சேர்ந்தார். டெல்லியில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் செயல் தலைவர் வீரேந்திர சச்தேவா, பொதுச் செயலாளர் ஹர்ஷ் மல்கோத்ரா முன்னிலையில் அவரை பா.ஜனதா கட்சிக்கு வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பவான் செராவத் கூறுகையில், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சியில் ஊழல் நிறைந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்களிடையே கருத்து வேறுபாடும் உள்ளது என்றார்.

Tags:    

Similar News