இந்தியா

மின்னல் தாக்கி பலி

மத்திய பிரதேசத்தில் சோகம் - மின்னல் தாக்கி 9 பேர் பலி

Published On 2022-08-07 07:26 GMT   |   Update On 2022-08-07 07:26 GMT
  • கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
  • மின்னல் தாக்கி காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

போபால்:

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் மின்னல் தாக்கியதில் 9 பேர் இறந்துவிட்டனர்.

விதிஷா மாவட்டத்தில் 4 பேர், சாட்னா மாவட்டத்தில் 4 பேர், குணா மாவட்டத்தில் ஒருவர் என மொத்தம் 9 பேர் பலியாகினர். மின்னல் தாக்கி மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களுக்கு விரைவில் சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News