இந்தியா

அருணாசல பிரதேசத்தின் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த மறுதேர்தலில் 80 சதவீத வாக்குப்பதிவு

Published On 2024-04-25 02:02 GMT   |   Update On 2024-04-25 02:02 GMT
  • 4 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் வன்முறை சம்பங்கள் நடந்தன.
  • வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடந்த அந்த தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டது.

இடாநகர்:

அருணாசல பிரதேசத்தின் 2 மக்களவை தொகுதிகள் மற்றும் 50 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் 4 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் வன்முறை சம்பங்கள் நடந்தன.

வாக்குப்பதிவு எந்திரங்களை சேதப்படுத்துதல், வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடந்த அந்த தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டது.

அந்த தொகுதிகளில் நேற்று மறுவாக்குப்பதிவு நடந்தது. காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடந்த இந்த தேர்தலில் 79.8 சதவீத வாக்குகள் பதிவாகின.

Tags:    

Similar News