இந்தியா

கொரோனா வைரஸ்

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 788 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2023-04-09 20:30 IST   |   Update On 2023-04-09 20:30:00 IST
  • இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் உயர்ந்து வருகிறது.
  • மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 788 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

மும்பை:

இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் தற்போது அதிகரித்து உள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 788 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்தார். 4587 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பேராபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தற்போதைய கொரோனா வகை இல்லை என மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News