இந்தியா

7 மாதமாக காத்திருக்கிறோம், காங்கிரஸ் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை: திரிணாமுல் குற்றச்சாட்டு

Published On 2024-01-30 05:51 GMT   |   Update On 2024-01-30 05:51 GMT
  • தொகுதிப் பங்கீடு குறித்த முடிவை முதலில் எடுப்பதே கூட்டணி தர்மமாகும்.
  • இதற்காக நாங்கள் 7 மாதமாக காத்திருக்கிறோம் என்றார் எம்.பி. அபிஷேக் பானர்ஜி.

கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலத்தில் மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என கடந்த வாரம் மம்தா பானர்ஜி அறிவித்தார்.

இந்நிலையில், மம்தா பானர்ஜியின் உறவினரும், எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தொகுதிப் பங்கீடு குறித்த முடிவை முதலில் எடுப்பதே கூட்டணி தர்மமாகும்.

இதற்காக நாங்கள் 7 மாதமாகக் காத்திருக்கிறோம். ஆனால், காங்கிரஸ் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

தேசிய அளவில் காங்கிரசுடன் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணியில் நீடித்து வருகிறது.

ஆனாலும் மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி கூறி வருகிறார். இந்தக் கோரிக்கை பா.ஜ.க.வுடையதா அல்லது காங்கிரசுடையதா? எங்களுடைய பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என தெரிவித்தார்.

இதன்மூலம் காங்கிரஸ் மீது மம்தா மீண்டும் கடும் அதிருப்தி அடைந்து இருப்பதாகக் கருதப்படுகிறது.

Tags:    

Similar News